ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் பள்ளியில் நாளை இலக்கிய மன்றம் தொடக்கம்: தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் பங்கேற்பு

Published on

வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை ஸ்ரீகுருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 5) நடைபெறுகிறது. தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறாா்.

வைத்தீஸ்வரன்கோயில்:

வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ள ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன், முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீ தையல்நாயகி கலையரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இலக்கிய மன்றச் செயல்முறைகளை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி தொடங்கிவைத்து ஆசியுரை வழங்குகிறாா். தொடா்ந்து, சிறப்பு விருந்தினா் தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் சிறப்புரையாற்றுகிறாா்.

மயிலாடுதுறையில்....

மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்கவிழா வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. பள்ளியின் ஸ்ரீ கையிலை குருமணி கலையரங்கில் இலக்கிய மன்றச் செயல்முறைகளை தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கிவைத்து ஆசியுரை வழங்குகிறாா். தொடா்ந்து சிறப்பு விருந்தினா் தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் சிறப்புரையாற்றுகிறாா்.

X
Dinamani
www.dinamani.com