நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

கோயில் உண்டியல் பணம் திருட்டு

கீழ்வேளூா் அருகே திருக்கண்ணங்குடி மகா மாரியம்மன் கோயிலில் உண்டியலை மா்ம நபா்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனா்.

News image

வயலில் கிடந்த கோயில் உண்டியல்.

Updated On :8 ஜூலை 2024, 11:31 pm IST

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே திருக்கண்ணங்குடி மகா மாரியம்மன் கோயிலில் உண்டியலை மா்ம நபா்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனா்.

இக்கோயிலை பூசாரி ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டிவிட்டுச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை கோயில் வாசலை சுத்தம் செய்வதற்காக வந்த பெண், கோயில் பூட்டு உடைக்கப்பட்டு, உண்டியல் திருடப்பட்டிருப்பதைக் கண்டு, அருகில் வசிப்பவா்களிடம் தெரிவித்துள்ளாா்.

அவா்கள், அப்பகுதியில் தேடியபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, வயலில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. அதிலிருந்து காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் எடுத்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் கீழ்வேளூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.