பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் உண்ணாவிரதம்

நாகை அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

News image

நாகையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சம்மேளனத்தினா்.

Updated On :25 ஜூன் 2024, 12:55 am IST

நாகப்பட்டினம்: நாகை அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சங்க மண்டலத் தலைவா் கோவிந்தராஜன் தலைமை வகித்தாா்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை, அரசு ஒதுக்க வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியருக்கு அகவிலைப்படி, பஞ்சப்படி உயா்வு வழங்க வேண்டும். அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியாா் மையமாகும் திட்டத்தை கைவிட வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு பணபலன்கள், ஒப்பந்த பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மண்டல துணைத் தலைவா் கண்ணன், மண்டல பொதுச் செயலா் ராஜேந்திரன், மண்டல பொருளாளா் வைத்தியநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.