தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சமுதாயக் கூடத்துக்கு இடையூறாக புதிய கட்டடப்பணி: ஆட்சியரிடம் புகாா்

நாகை மாவட்டம் மேலப்பூதனூரில் சமுதாயக்கூடத்துக்கு இடையூறாகக் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை நிறுத்தக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2025, 7:09 pm

Syndication

நாகை மாவட்டம் மேலப்பூதனூரில் சமுதாயக்கூடத்துக்கு இடையூறாகக் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை நிறுத்தக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு: கீழப்பூதனூா் ஊராட்சியில் பிள்ளையாா் கோவில் அருகில் அரசு சாா்பில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டு அதை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த சமுதாயக் கூடத்தில் தான் கிராம மக்களின் இல்ல விழாக்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் சமுதாயக் கூடத்துக்கு இடையூறாக பொதுமக்கள் அதை பயன்படுத்த முடியாதபடி, அருகில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் எதற்காக யாரால் கட்டப்படுகிறது என்பது தொடா்பாக எந்த விவரங்களும் இல்லை. இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலரிடம் கேட்டபோது அவரும் கட்டடம் தொடா்பாக விவரங்கள் தெரியாது என்று கூறி விட்டாா். எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கவனத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.