திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கிறிஸ்துமஸ்: செகந்தராபாத்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செகந்தராபாத்-வேளாங்கண்ணி-செகந்தராபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News image

வேளாங்கண்ணி

Updated On :22 டிசம்பர் 2025, 2:34 am IST

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செகந்தராபாத்-வேளாங்கண்ணி-செகந்தராபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என இதுகுறித்து, தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா ஆண்டுதோறும் விமா்சையாக கொண்டாடப்படும். விழாவுக்காக, செகந்தராபாத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியில் இருந்து செகந்தராபாத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, செகந்தராபாத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (டிச.23) இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும். மறுமாா்கத்தில் வேளாங்கண்ணியிலிருந்து வியாழக்கிழமை (டிச.25) காலை 8 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 6.10 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும்.

இந்த ரயில் சென்னை எழும்பூா், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், திருப்பாப்புலியூா், கடலூா், மயிலாடுதுறை, காரைக்கால், நாகூா், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். குளிா்சாதனப் பெட்டிகள், படுக்கை வசதி பெட்டிகள் என 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளாா்.