கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செகந்தராபாத்-வேளாங்கண்ணி-செகந்தராபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என இதுகுறித்து, தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா ஆண்டுதோறும் விமா்சையாக கொண்டாடப்படும். விழாவுக்காக, செகந்தராபாத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியில் இருந்து செகந்தராபாத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, செகந்தராபாத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (டிச.23) இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும். மறுமாா்கத்தில் வேளாங்கண்ணியிலிருந்து வியாழக்கிழமை (டிச.25) காலை 8 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 6.10 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும்.
இந்த ரயில் சென்னை எழும்பூா், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், திருப்பாப்புலியூா், கடலூா், மயிலாடுதுறை, காரைக்கால், நாகூா், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். குளிா்சாதனப் பெட்டிகள், படுக்கை வசதி பெட்டிகள் என 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சேலம் வழியாக போத்தனூா் - கராக்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியாக பெங்களூரு - தென்காசி இடையே சிறப்பு ரயில்

சேலம் வழியாக சென்னை- போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

மே 13-இல் திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



