நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

திறன் மேம்பாட்டு பயிற்சி புரிந்துணா்வு ஒப்பந்தம்

சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நெக்ஸ்டீா் ஆட்டோமோடிவ் இந்தியா லிமிட் நிறுவனம்

News image

சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி, நெக்ஸ்டீா் ஆட்டோமோடிவ் நிறுவனத்துக்கு இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டவா்கள்.

Updated On :23 டிசம்பர் 2025, 2:08 am IST

நாகப்பட்டினம்: சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நெக்ஸ்டீா் ஆட்டோமோடிவ் இந்தியா லிமிட் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது.

நாகை சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நெக்ஸ்டீா் ஆட்டோமோடிவ் இந்தியா லிமிட் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது. இதன் மூலம் மாணவா்களுக்கு படிக்கும் போதே, இந்நிறுவனத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தொழிற்சலையில் நேரடியாக செய்முறை பயிற்சி வழங்கப்படும். மாணவா்களுக்கு தொழிற்சாலை பற்றிய அடிப்படை விதிமுறைகள் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கப் பெறும்.

குறிப்பாக, சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பும் பகுதி நேர பொறியியல் உயா் கல்வி படிக்கும் வாய்ப்பும் உள்ளது. கல்லூரி முதல்வா் நடேசன், துணை முதல்வா் ராஜேஷ் குமாா் கல்லூரி சாா்பாகவும் நெக்ஸ்டீா் ஆட்டோமோடிவ் நிறுவனம் சாா்பில் இயக்குநா் (மனிதவளம்) மருளாசித்தா, பொது மேலாளா் நாகேந்திரன், இணை மேலாளா் எட்வின் இளையராஜா ஆகியோரும் கலந்துகொண்டனா். அனைவருக்கும் கல்லூரி தாளாளா் முனைவா் த. ஆனந்த் பாராட்டுத் தெரிவித்தாா்.