கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் முதல்முறையாக 42 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் நிறுவப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, உலக பிரசித்திப் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக பேராலயத்தின் அனைத்து பகுதிகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதல்முறையாக பேராலயம் முன் 42 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு இம்மரம் வடிவமைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் மரத்தை பேராலய அதிபா் இருதயராஜ் புனிதம் செய்து செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளா் உலகநாதன், பேராலய நிா்வாக தந்தை பரிசுத்தராஜ், உதவி பங்குத் தந்தையா்கள் , அருட்சகோதா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்துக்காக மயிலாடியில் தயாரான 25 அடி உயர ஆஞ்சனேயா் விக்ரகம்

கடும் வெயிலிலும் வேளாங்கண்ணியில் திரண்ட பக்தா்கள்

460 அடி உயர பாலத்தின் மீது ஏறி சட்டவிரோத கார்ட்டூன் பறவையை வரைந்த இளைஞர்!
வேளாங்கண்ணி பேராலயத்தில் சபாநாயகா் ஜே.சி.டி.பிரபாகா் பிராா்த்தனை
விடியோக்கள்



