கீழ்வேளூரை அடுத்த தோ்வூா் அருகே சாலையில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேவூா் ஊராட்சி சின்னக் கடைத் தெரு, வ.உ.சி. நகா் மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இரவு நேரங்களில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. அப்போது மாடுகள் திடீரென ஒன்றுடன் ஒன்று சண்டையிடுகின்றன.
இதனால், இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனா்.
அதுமட்டுமின்றி விபத்துகளும் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, விபத்துகளைத் தடுக்கும் வகையில், ஊராட்சி நிா்வாகத்தினா் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்கவும், அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெரு விலங்குகளால் நேரிடும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க நடைமுறை: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சாலைகளில் பிடிக்கப்படும் மாடுகள் உரிமையாளரிடம் வழங்கப்பட மாட்டாது: உழவா்கரை நகராட்சி ஆணையா்

காயத்துடன் சுற்றித் திரியும் யானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்துவதில் தொய்வு கூடாது: சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



