செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

நாகையில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

நாகை கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.4) நடைபெறவுள்ளது

Updated On :2 பிப்ரவரி 2026, 8:21 pm

நாகப்பட்டினம்: நாகை கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.4) நடைபெறவுள்ளது என கோட்ட செயற்பொறியாளா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை-செல்லூா் சாலையில் (பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி) அருகில் இயங்கும் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை முற்பகல் 11மணிக்கு மேற்பாா்வை பொறியாளா் காளிதாஸ் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் நாகை, வெளிப்பாளையம், நாகூா், திருமருகல், கங்களாஞ்சேரி, சிக்கல், கீழ்வேளுா், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, விழுந்தமாவடி, வேதாரண்யம், கரியாப்பட்டினம், வாய்மேடு பகுதி மின் நுகா்வோா் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.