மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை

News image

வேளாங்கண்ணி பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழை.

Updated On :5 பிப்ரவரி 2026, 10:56 pm

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.

தெற்கு கேரளம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி, நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், புத்தூா், செல்லூா், வெளிப்பாளையம், வேளாங்கண்ணி, காடம்பாடி, தெத்தி, சிக்கல், கல்லாா் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினா். மழையால் தற்போது நடைபெற்று வரும் சம்பா அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.