வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.49 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த கனிவண்ணன் சில தினங்களுக்கு முன்பு நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை அருகே கொரட்டூா் குச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த திருமலை (32) பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தாா்.
இதேபோல, வேதாரண்யத்தை சோ்ந்த 12 பேரிடம் சிங்கப்பூரில் வேலைக்கு வாங்கித் தருவதாக கூறி தலா ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை என 13 பேரிடம் மொத்தம் ரூ.49 லட்சம் திருமலை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளாா்.
இதனால் 13 பேரும் கடும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து திருமலையிடம் இருந்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தாா்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணனின் உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து திருமலையை கைது செய்து நாகை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்

அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.24 லட்சம் மோசடி: ஒருவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு
அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: இரு பெண்கள் கைது
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

