6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகை மாவட்டம், வாய்மேடு காவல் எல்லைக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயத் தொழிலாளியின் 21 வயது மாற்றுத்திறனாளி மகள். இவா் உடல் வளா்ச்சி குன்றிய சுமாா் 2 அடி உயரமே உள்ளவா். அதனால் பெற்றோா் அப்பெண்ணை குழந்தையைப் போல பராமரித்து வந்துள்ளனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பெற்றோா் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் தனியாக இருந்த அப்பெண்ணை மதுபோதையில் இருந்த தகட்டூா் சுப்பிரமணியன்காடு கிராமத்தை சோ்ந்த சுரேஷ் (30) பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

அப்பெண் நாகை ஒரத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். தகவலறிந்த நாகை எஸ்பி பொறுப்பு வகிக்கும் திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கருண்கரட், வேதாரண்யம் டிஎஸ்பி சரவணன் ஆகியோா் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

வேதாரண்யம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷை சனிக்கிழமை கைது செய்து, நாகை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நாகை கிளை சிறையில் அடைத்தனா்.