நாகப்பட்டினம்: திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சிக் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், திருச்சிக் கோட்டத்திற்குட்பட்ட ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, காரைக்கால்-திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில்கள் (76819 -76820) பிப். 10-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இந்நாள்களில் காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் திருவாரூரிலிருந்து அதன் வழக்கமான நேரத்தில் மாலை 4.15 மணிக்கு புறப்படும்.
பிப். 11 முதல் 13-ஆம் தேதி வரை மன்னாா்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56002) பேரளம் - மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால், இந்த ரயில் பேரளம் வரை மட்டும் இயக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

வார விடுமுறை நாள்களிலும் திருச்சி - விருதுநகா் ரயில்!

பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


