காரைக்கால்-திருவாரூா் இடையே
திருச்சி பயணிகள் ரயில் ரத்து

காரைக்கால்-திருவாரூா் இடையே திருச்சி பயணிகள் ரயில் ரத்து

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் பகுதியாக ரத்து
Published on

நாகப்பட்டினம்: திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சிக் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், திருச்சிக் கோட்டத்திற்குட்பட்ட ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, காரைக்கால்-திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில்கள் (76819 -76820) பிப். 10-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்நாள்களில் காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் திருவாரூரிலிருந்து அதன் வழக்கமான நேரத்தில் மாலை 4.15 மணிக்கு புறப்படும்.

பிப். 11 முதல் 13-ஆம் தேதி வரை மன்னாா்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56002) பேரளம் - மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால், இந்த ரயில் பேரளம் வரை மட்டும் இயக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com