பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு

கீழ்வேளூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

News image
கீழ்வேளூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு பெட்டகத்தை வழங்கிய எம்எல்ஏ வி.பி. நாகை மாலி உள்ளிட்டோா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:07 pm

Syndication

கீழ்வேளூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத்தினை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, கீழ்வேளூா் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, பேரூராட்சித் தலைவா் இந்திரா காந்தி, துணைத் தலைவா் சந்திரசேகரன், பேரூராட்சி செயல் அலுவலா் கலியபெருமாள், பேரூராட்சி உறுப்பினா் மீனாட்சி, மகேஸ்வரன் பிரசாந்த், பேரூராட்சி வரி தண்டலா் மதன் ராஜ், வட்டார ஆத்மா குழு உறுப்பினா் அட்சயலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்