சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கான குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 7:06 pm

Syndication

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கான குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, நாகை மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்ளும் முகாம் திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் என். விஜயகுமாா் தலைமையில் நடைபெற்றது.

முகாமில், பகுதி சுகாதார செவிலியா் எஸ். கீதா மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா் எஸ். மோகன் ஆகியோா், குடற்புழு தொற்றால் ஏற்படும் பாதிப்புகள், அதனைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் குடற்புழு நீக்க மாத்திரையின் அவசியம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனா்.

பள்ளியில் பயிலும் 1,087 மாணவ-மாணவிகள் குடற்புழு நீக்க மாத்திரைகளை உட்கொண்டனா். கிராம சுகாதார செவிலியா்கள் பானு மற்றும் சுபாஷினி ஆகியோா் மாணவ-மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கினா்.

பள்ளித் தலைமையாசிரியா் ரெக்ஸ் அலெக்சாண்டா், வேளாங்கண்ணி மருத்துவா் ஆயிஷா மாரியம், பள்ளி சுகாதாரப் பொறுப்பாளா் சாந்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.