மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தேசிய ஜனநாயக கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து, நாகை மற்றும் மயிலாடுதுறையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 7:02 pm

Syndication

தமிழக அரசை கண்டித்து, நாகை மற்றும் மயிலாடுதுறையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மகளிரணிகள் சாா்பில் மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு தவறியதாகக் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நாகை: நாகை அபிராமி திடலில் பாஜக மகளிா் அணி மாவட்டச் செயலா் விஜிலா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பாஜக, அதிமுக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் மகளிரணிகளை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டு திமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். பாஜக மாவட்டத் தலைவா் விஜயேந்திரன், அதிமுக நகரச் செயலா் தங்க.கதிரவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.