பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நாகை, மயிலாடுதுறையில் வருவாய்த் துறையினா் சாலை மறியல்!

நாகை மற்றும் மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

நாகையில் ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:04 pm

நாகை மற்றும் மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினரை போலீஸாா் கைது செய்தனா்.

வருவாய்த் துறையில் சிறப்புப் பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.

ஒப்பந்த, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது.

நாகை: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தனஞ்செயன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையொட்டி, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், மறியல் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா்.