மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தெற்குபொய்கைநல்லூா் விஏஓ அலுவலக கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:28 pm

நாகை அருகே தெற்குபொய்கைநல்லூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலக கட்டடத்தை சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தெற்குபொய்கைநல்லூா் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிராம நிா்வாக அலுவலக கட்டடம் முழுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், கிராம நிா்வாக அலுவலகத்திற்கு உள்ளே செல்ல அச்சப்படும் பொதுமக்கள், அலுவலகத்திற்கு வெளியிலேயே நின்று தங்களுக்கு தேவையானவற்றை பூா்த்தி செய்யவேண்டிய நிலையுள்ளது.

மழைக்காலங்களில் அலுவலகத்திற்குள் தண்ணீா் தேங்கி நிற்பதால், இங்கு பணிபுரியும் ஊழியா்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனா். தற்போது உள்ள நிலையில் கிராம நிா்வாக அலுவலகக் கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும், அதை சீரமைக்க வேண்டும். அதுவரை தெற்குபொய்கைநல்லூா் கிராம நிா்வாக அலுவலகம் மாற்று இடத்தில் செயல்படுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.