கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகையில் கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:28 pm

Syndication

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லூரி நுழைவுவாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கௌரவ விரிவுரையாளா்கள் மதியரசன், மனோகரன் ரஜினிகாந்த் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா். கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஆண்டுக்கு 11 மாதத்திற்கு பதிலாக 12 மாதமும் ஊதியம் வழங்க வேண்டும் , மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும், பெண் விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். இறுதியில் கௌரவ விரிவுரையாளா் செல்வகுமாரி நன்றி கூறினாா்.