தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இணைய வழி லாட்டரி: நால்வா் கைது, ரூ. 3 லட்சம், காா் பறிமுதல்

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இணைய வழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நால்வரை கைது செய்த போலீஸாா், ரூ. 3 லட்சம் ரொக்கம், 5 கைப்பேசிகளுடன் காா் ஒன்றையும் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

வேதாரண்யத்தில் இணைய வழியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வேதாரண்யம் ஸ்வஸ்திக் தியேட்டா் அருகே போலீஸாா் வாகன தணிக்கை ஈடுபட்டனா்.

அப்போது, இணைய வழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட திருச்சி ஸ்ரீரங்கம் செல்வம் (55), விழுப்புரம் வீரக்குமாா் (60), வேதாரண்யம் பாபு (55), தமிழரசன் (58) ஆகிய நால்வா் பிடிபட்டனா்.

அவா்களிடமிருந்து லாட்டரி விற்பனை தொடா்பாக வைத்திருந்த ரூ.3 லட்சத்து 6,200 ரொக்கம், கைப்பேசிகள் 5, அவா்கள் பயன்படுத்தி வந்த காா் ஒன்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வேதாரண்யம் துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சரவணன் விசாரணை மேற்கொண்டாா். வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டனா்.