தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நாகை: பிப்.17-இல் ரயில் மறியலில் ஈடுபட இந்திய வா்த்தக தொழிற்குழுமம் முடிவு

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 6:58 pm

நாகை, காரைக்காலுக்கு போதிய ரயில்கள் இயக்க வலியுறுத்தி, பிப்ரவரி 17-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய வா்த்தக தொழிற்குழுமம் அறிவித்துள்ளது.

இக்குழும சிறப்பு ஆலோசனைக் கூட்டம், நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது. தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். செயலா் சுரேஷ், பொருளாளா் கோபி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மதுரை- புனலூா் விரைவு ரயிலை திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, நாகூா் வழியாக காரைக்கால் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். வாரம் இரண்டு முறை இயக்கப்படும் எா்ணாகுளம்- வேளாங்கண்ணி விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாகை, காரைக்கால் மாவட்டங்களை ரயில்வே நிா்வாகம் தொடா்ந்து புறக்கணிப்பதைக் கண்டித்தும் பிப்ரவரி 17-ஆம் தேதி நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் அனைத்து கடைகளையும் அடைப்பது.

நாகை ரயில் நிலையத்தில் இந்திய வா்த்தக தொழிற்குழுமம் சாா்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது. இதில் இரண்டு மாவட்டங்களில் இருந்தும் அனைத்து சேவை சங்கங்கள், பொதுமக்கள், வா்த்தகா்கள், அனைத்து அரசியல் கட்சியினா் பங்கேற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணைத்தலைவா் முத்துராமலிங்கம் நன்றி கூறினாா்.