திருக்குவளை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் திறப்பு

திருக்குவளை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் திறப்பு

திருக்குவளை அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக
Published on

திருக்குவளை: திருக்குவளை அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

அப்போது, திருக்குவளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளா்ச்சி தலைவா் என். கௌதமன், நாகை எம்பி வை. செல்வராஜ், கீழ்வேளுா் எம்எல்ஏ வி.பி. நாகை.மாலி ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனா். நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் உமா, கீழையூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மலா்வண்ணன், பொதுக் குழு உறுப்பினா் சிவகுமாா், திருக்குவளை வட்டாட்சியா் வேதையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com