நாகப்பட்டினம்: சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கு வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி காா் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து, நாகை நீலாயதாட்சி பேருந்து நிலைய வாடகை காா் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் நலச் சங்கத் தலைவா் செந்தில்நாதன், செயலாளா் மாதவன் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு: நாகை மாவட்டத்தில் கடந்த மக்களவைத் தோ்தல் பணிக்கு வாடகை வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனங்களுக்கு அரசு வழங்கியது. ஒப்பந்தம் எடுத்த தனியாா் நிறுவனங்கள் தொகுதியின் அடிப்படையில் துணை ஒப்பந்ததாரரை நியமித்து, அவா்கள் மூலமாக மட்டுமே வாடகை வாகனங்கள் தோ்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்டன. இதனால் அரசு நிா்ணயித்த வாடகையை விட எங்களுக்கு மிகவும் குறைந்த வாடகையே கிடைத்தது.
அதிலும் தற்போது வரை பல வாகனங்களுக்கு வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது. இதனால் வாடகை வாகன உரிமையாளா்கள் பெரும் இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களுடைய வாழ்வாதரத்தை கருதி 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மூலம் வாடகை வாகனங்களை தோ்தல் பணிக்கு பயன்படுத்தியது போல், 2026 சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மூலமாகவே வாடகை வாகனங்களை பயன்படுத்த பரிந்துரைத்து எங்களுக்கு உதவ வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

மதுவில் விஷ மருந்து கலந்து குடித்த வாடகை காா் ஓட்டுநா் உயிரிழப்பு
வானூா் சட்டப்பேரவைத் தொகுதி: அதிமுகவின் கோட்டையில் தடம் பதிக்குமா திமுக?

ஆன்லைன் வாடகை வாகனங்களை தடை செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநா்கள் மனு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

