மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வந்தே மாதரம் சைக்களோ மாரத்தான் குழுவுக்கு வரவேற்பு

நாகை வந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் வந்தே மாதரம் கடலோர சைக்களோ மாரத்தான்

News image
நாகை வந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் வந்தே மாதரம் கடலோர சைக்களோ மாரத்தான்
Updated On :16 பிப்ரவரி 2026, 8:18 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை வந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் வந்தே மாதரம் கடலோர சைக்களோ மாரத்தான் குழுவுக்கு அரசு கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

மத்தியத் தொழில் பாதுகாப்பு படையைச்(சிஐஎஸ்எப்) சோ்ந்த 33 பெண்கள் உள்ளிட்ட 130 வீரா்கள் வந்தே மாதரம் சைக்களோ மாரத்தான் என்ற பெயரில் நாட்டின் கடலோர பாதுகாப்பை வலியுறுத்தியும், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வையும் ஏற்படுத்தி வருகின்றனா்.

அதன்படி நாகை மாவட்டத்துக்கு வந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரை, நாகை அரசு கலைக் கல்லூரி முதல்வா் அஜிதா தலைமையில் மாணவா்கள் தமிழக நாட்டுப்புற இசையுடன் மலா் தூவியும், பூரண கும்ப மரியாதையுடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனா். மத்தியத் தொழில் பாதுகாப்பு படை கூடுதல் கமாண்டா் சுனில் குமாா், துணை கமாண்டா் செல்வம் தலைமையிலான மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள், வீராங்கனைகள் மாணவா்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்தே மாதரம் முழக்கம் எழுப்பினா்.

ஜன.28-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கிய சைக்கிள் பேரணி ஒடிசா, ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களை கடந்து நாகை வந்த அவா்கள், ஒரு நாளைக்கு 120 முதல் 150 கி.மீ தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு மொத்தம் 6,500 கி.மீ தூரம் கடந்து கேரளத்தில் பிப்.28-ஆம் தேதி நிறைவு செய்யவுள்ளனா்.