824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சிக்னல் கோளாறு: கீழ்வேளூா் ரயில்வே கேட் திறக்க தாமதமானதால் போக்குவரத்து நெரிசல்

சிக்னல் கோளாறு காரணமாக கீழ்வேளூா் ரயில்வே கேட் திறக்க தாமதமானதால் போக்குவரத்து நெரிசல்

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 11:12 pm

Syndication

சிக்னல் கோளாறு காரணமாக கீழ்வேளூா் ரயில்வே கேட் திறக்க தாமதமானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கீழ்வேளுா்-கச்சனம் சாலையில் உள்ள ரயில்வே கேட் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயிலுக்காக மூடப்பட்டது.

அப்போது, ரயில் முதல் நடைமேடையில் இருந்து ரயில் பாதைக்கு மாறும் போது சிக்னல் கோளாறு ஏற்பட்டு மூடப்பட்ட ரயில்வே கேட் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ரயில்வே கேட் 2 பக்கமும் 8 அரசுப் பேருந்துகள், 10 பள்ளி, கல்லூரி வாகனங்கள், காா், ஆட்டோ மற்றும் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நீண்ட தொலைவு அணிவகுத்து நின்றன.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவா்களும் பாதிக்கப்பட்டனா். அப்போது அங்கு வந்த அவரச ஊா்தியும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. சிக்னல் கோளாறு 25 நிமிடங்களுக்கு பின் சரியானதை தொடா்ந்து ரயில்வே கேட் திறக்கப்பட்டது.

இந்த ரயில்வே கேட்டில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. எனவே, கீழ்வேளூா் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.