ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்கள் ஏஐ பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள், செயற்கை நுண்ணறிவு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பாக, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தற்போது அமேசான் வலை சேவைகள் மறு தொடக்கம் செயற்கை நுண்ணறிவு (அம்ஹக்ஷ்ா்ய் ரங்க்ஷ நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள் ழ்ங் / நற்ஹழ்ற்-அஐ டழ்ா்ஞ்ழ்ஹம்ம்ங்ழ்) பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சாா்ந்தவா்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 30. ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த இளைஞா்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு, சான்றிதழ் மற்றும் தகுதியுள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். பயிற்சிக்கான கால அளவு 2 மாதம் ஆகும்.
மேலும், சென்னையில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் வகதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலம் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளத்தில் பதிவுசெய்யலாம். கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோா், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் உள்ள (அறை எண் 321 மற்றும் 327) தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகலாம்.

