காரைக்காலில் இன்று கண்காணிப்பு: கேமராக்கள் இயக்கிவைக்கும் நிகழ்ச்சி: புதுச்சேரி முதல்வர் பங்கேற்கிறார்

காரைக்காலில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி சனிக்கிழமை (அக். 21) இயக்கிவைக்கவுள்ளார்.
Updated on
1 min read

காரைக்காலில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி சனிக்கிழமை (அக். 21) இயக்கிவைக்கவுள்ளார்.
காரைக்காலில் ஓ.என்.ஜி.சி. மற்றும் புதுச்சேரி மின் திறல் குழும நிதி ரூ. 87 லட்சத்தில், முக்கியமாக 26 இடங்களில் 2 சுழலும் கேமரா உள்ளிட்ட 53 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்புவோரை அடையாளம் காணவும், வழிப்பறி போன்ற சமூக விரோத குற்றச் செயலில் ஈடுபடுவோரை கண்காணித்துப் பிடிக்க, கண்காணிப்பு கேமரா உதவும் வகையில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காரைக்கால் ஆட்சியரகம் அருகேயுள்ள காமராஜர் திடலில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் காவல்துறை சார்பில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதில் புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி, அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், புதுச்சேரி காவல்துறைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com