பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

திருமணமாகி ஒன்றரை மாதத்தில் பெண் சாவு: வட்டாட்சியர் விசாரணை

காரைக்காலில் திருமணமாகி ஒன்றரை மாதத்தில் பெண் உயிரிழந்தது தொடர்பாக வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார். 

Updated On :8 அக்டோபர் 2018, 7:40 am IST

காரைக்காலில் திருமணமாகி ஒன்றரை மாதத்தில் பெண் உயிரிழந்தது தொடர்பாக வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார். 
காரைக்கால் சின்னக்கோவில்பத்துப்பேட் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கூட்டுறவு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் பேரளம் அருகே உள்ள மகாராஜபுரத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (22) என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஜெயஸ்ரீ ஏற்கெனவே மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமாகி ஒன்றரை மாதமே ஆவதால், துணை வட்டாட்சியர் நம்புதிரி திரிபாதி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.