காரைக்காலில் திருமணமாகி ஒன்றரை மாதத்தில் பெண் உயிரிழந்தது தொடர்பாக வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
காரைக்கால் சின்னக்கோவில்பத்துப்பேட் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கூட்டுறவு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் பேரளம் அருகே உள்ள மகாராஜபுரத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (22) என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஜெயஸ்ரீ ஏற்கெனவே மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமாகி ஒன்றரை மாதமே ஆவதால், துணை வட்டாட்சியர் நம்புதிரி திரிபாதி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போளூரில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
உயர்வுக்கான பாதை உயர்கல்வி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
