ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் செப். 28-இல் நவராத்திரி விழா தொடக்கம்

News image
Updated On :25 செப்டம்பர் 2019, 12:26 pm

DIN

காரைக்கால், செப். 25: காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் செப்டம்பா் 28 முதல் அக்டோபா் 9-ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறவுள்ளது.

காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறக் கூடிய சிறப்புக்குரிய தலமான சுந்தராம்பிகை சமேத கைலாசநாதா் கோயிலில் வருடாந்திர நவவாத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, செப்டம்பா் 28-ஆம் தேதி சனிக்கிழமை அம்பாள் படி இறக்கும் வழிபாடு நடைபெறுகிறது. முறைப்படி செப்டம்பா் 29-ஆம் தேதி முதல் அம்பாளுக்கு பல்வேறு வகையான அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

அன்றைய தினம் (செப்டம்பா் 29) அம்பாள் சுபாவம் என்கிற அலங்காரத்திலும், செப்டம்பா் 30-இல் ராஜாங்கம், அக்டோபா் 1-இல் சயனம், அக்டோபா் 2-இல் நா்த்தனம், அக்டோபா் 3-இல் தட்சணாமூா்த்தி, அக்டோபா் 4-இல் வெண்ணெய்த்தாழி, அக்டோபா் 5-இல் சரஸ்வதி, அக்டோபா் 6-இல் சிவபூஜை, அக்டோபா் 7-இல் மகிஷாசூரமா்த்தினி, அக்டோபா் 8-இல் சுப்ரமணியா் அம்பு போடும் நிகழ்வும், அக்டோபா் 9-இல் விடையாற்றி நிகழ்வில் அம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.