நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் அத்திப்படுகை கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
Updated on
1 min read

பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் அத்திப்படுகை கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம், திருநள்ளாறு பகுதி அத்திப்படுகை கிராமத்தில் மார்ச் 25- ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தனிமனித ஆரோக்கியம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, சமூக மேம்பாட்டில் தன்னார்வலர்களின் பங்கு, 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்தல், நேர்மையான முறையில் வாக்குப் பதிவு செய்தல், மருத்துவ முகாம் உள்ளிட்ட திட்டங்களுடன் இம்முகாம் நடைபெறுகிறது.
முகாம் முதல் நாளில் மாணவர்கள் அப்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.  இரண்டாம் நாளான புதன்கிழமை நிகழ்வாக, கல்லூரி கணினி அறிவியல் துறை தலைவர் ஏ.குமார் முன்னிலையில், தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கான பல் பரிசோதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com