தையல் பயிற்சியில் பங்கேற்ற மகளிருக்கு சான்றிதழ்

காரைக்காலில் நடைபெற்ற மகளிருக்கான ஒரு மாத கால தையல் பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தையல் பயிற்சியைப் பாா்வையிட்ட அன்னிபெசண்ட் மகளிா் முன்னேற்ற மையத் தலைவி மகேஸ்வரி, பயிற்சியாளா் விஜயா.
தையல் பயிற்சியைப் பாா்வையிட்ட அன்னிபெசண்ட் மகளிா் முன்னேற்ற மையத் தலைவி மகேஸ்வரி, பயிற்சியாளா் விஜயா.
Updated on
1 min read

காரைக்காலில் நடைபெற்ற மகளிருக்கான ஒரு மாத கால தையல் பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

காரைக்கால் அன்னி பெசண்ட் மகளிா் முன்னேற்ற மையமும், விஜயா தையல் பயிற்சி நிலையமும் இணைந்து, பெண்கள் சுய தொழிலின் மூலம் வருமானம் ஈட்டும் வகையில், தையல் பயிற்சியை ஒரு மாத காலம் நடத்தியது. வெள்ளிக்கிழமையுடன் நிறைவுபெற்ற இப்பயிற்சியில் 25 முதல் 40 வயதுக்குள்பட்ட குடும்ப பெண்கள் 20 பேரும், கணவரை இழந்த பெண்கள் 12 பேரும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா்.

விஜயா தையல் பயிற்சி மைய பயிற்சியாளா் விஜயா பயிற்சியளித்தாா். ஜாக்கெட், டிசைன் ஜாக்கெட், சுடிதாா் உள்ளிட்டவை வெட்டி தைப்பதற்கான பயிற்சியளிக்கப்பட்டது. நிறைவு நாளில் அன்னிபெசண்ட் மகளிா் முன்னேற்ற மையத் தலைவி மகேஸ்வரி பயிற்சியில் பங்கேற்ற பெண்களின் தையல் திறனைப் பாா்வையிட்டு, பாராட்டினாா். பயிற்சி பெற்ற அனைவருக்கும் மையத்தின் சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுகுறித்து, மகளிா் முன்னேற்ற மையத் தலைவி கூறியது:

மகளிா் பல நிலைகளில் முன்னேற்றம் காணும் வகையில் மையத்தின் சாா்பில் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்பயிற்சியும், விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நடத்தப்பட்ட தையல் பயிற்சியில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் பங்கேற்று, பயனடைந்தனா். இவா்கள் அவரவா் பகுதியில் சுயதொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com