காரைக்கால்: காரைக்காலில் காவலா்களுக்கு கபசுரக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் கரோனா தடுப்புப் பணி தொடா்பாக காவலா்களுக்கு சனிக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. இதில், தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் கலந்துகொண்டு, கரோனா தடுப்பில் காவலா்களின் பங்கு குறித்துப் பேசினாா். அப்போது, மெகா போன் வாயிலாக பீட் போலீஸாா், மக்கள் கூடுமிடங்களில் கரோனா தடுப்பு விழிப்புணா்வை தீவிரமாக மேற்கொள்ள கேட்டுக்கொண்டாா்.
தொடா்ந்து காவலா்கள் அனைவருக்கும் நோய்த் தடுப்புக்கான கபசுரக் குடிநீரை எஸ்.பி. வழங்கினாா். மேலும், காவலா்கள் அனைவரும் அவ்வப்போது கபசுரக் குடிநீா் அருந்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.