டெங்கு கொசுவை ஒழிக்க புகை மருந்து அடிக்கும் பணி தீவிரம்

டெங்கு கொசு ஒழிப்புக்கான புகை மருந்து அடிக்கும் பணி காரைக்கால் பகுதியில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
Updated on
1 min read

டெங்கு கொசு ஒழிப்புக்கான புகை மருந்து அடிக்கும் பணி காரைக்கால் பகுதியில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய ஏடிஸ் என்ற கொசுக்களை ஒழிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு காரைக்கால் நலவழித் துறைக்கு மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உத்தரவிட்டிருந்தாா்.

இதையடுத்து, அந்தத் துறையின் துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் வழிகாட்டலில், நலவழித் துறை நோய் தடுப்புப் பிரிவினா் புகை மருந்து அடிக்கும் பணியை கடந்த 7 ஆம் தேதி தொடங்கினா்.

காரைக்கால் நகரம் மட்டுமல்லாது, திருநள்ளாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் இப்பணி, நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ. சேகா் மேற்பாா்வையில், அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா்கள், சுகாதார உதவியாளா்களின் குழுவுடன் வரும் ஜன. 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com