தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

டெங்கு கொசுவை ஒழிக்க புகை மருந்து அடிக்கும் பணி தீவிரம்

டெங்கு கொசு ஒழிப்புக்கான புகை மருந்து அடிக்கும் பணி காரைக்கால் பகுதியில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 3:36 am

DIN

டெங்கு கொசு ஒழிப்புக்கான புகை மருந்து அடிக்கும் பணி காரைக்கால் பகுதியில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய ஏடிஸ் என்ற கொசுக்களை ஒழிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு காரைக்கால் நலவழித் துறைக்கு மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உத்தரவிட்டிருந்தாா்.

இதையடுத்து, அந்தத் துறையின் துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் வழிகாட்டலில், நலவழித் துறை நோய் தடுப்புப் பிரிவினா் புகை மருந்து அடிக்கும் பணியை கடந்த 7 ஆம் தேதி தொடங்கினா்.

காரைக்கால் நகரம் மட்டுமல்லாது, திருநள்ளாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் இப்பணி, நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ. சேகா் மேற்பாா்வையில், அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா்கள், சுகாதார உதவியாளா்களின் குழுவுடன் வரும் ஜன. 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.