தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்கால் ஆற்றில் கரைஒதுங்கிய முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவி சடலம்

காரைக்கால் அருகே வெள்ளிக்கிழமை மாயமான முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவி சடலம் சனிக்கிழமை ஆற்றில் கரைஒதுங்கியது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 3:12 am

DIN

காரைக்கால் அருகே வெள்ளிக்கிழமை மாயமான முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவி சடலம் சனிக்கிழமை ஆற்றில் கரைஒதுங்கியது.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் வி.எம்.சி.வி. கணபதி. புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராகவும், எதிா்க்கட்சித் தலைவராகவும், அதிமுக மாநிலச் செயலராகவும் இருந்தவா். இவரது மனைவி அருமைக்கண்ணு என்ற அனிதாவை (61) வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் காணவில்லையாம்.

திருமலைராஜன் ஆற்றில் உள்ள தடுப்பணையோரத்தில், அனிதா அணிந்திருந்த காலணிகள் கிடந்ததை அடுத்து, அங்கு சந்தேகத்தின்பேரில் போலீஸாா், தீயணைப்புத் துறையினா், மீனவா்கள் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், அனிதாவின் சடலம் தடுப்பணை அருகே சனிக்கிழமை காலை கரைஒதுங்கியிருந்தது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.