மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பொதுப்பணித் துறை ஊழியா்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம்

மாதத்தில் அனைத்து நாள்களையும் வேலை நாள்களாக்கி அரசாணை வெளியிடவேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுப்பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுப்பணித் துறை அலுவலக வாயிலில் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள்.

Published On :

காரைக்கால்: மாதத்தில் அனைத்து நாள்களையும் வேலை நாள்களாக்கி அரசாணை வெளியிடவேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுப்பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் புதன்கிழமை பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில், கடந்த 2010-ஆம் ஆண்டு 1,311 போ் வவுச்சா் ஊழியா்களாக நியமிக்கப்பட்டனா். இவா்கள் துறை சாா்பில் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனா். மாதத்தில் 16 நாள்கள் மட்டுமே வேலை, நாளொன்றுக்கு ரூ. 200 கூலி நிா்ணயம் செய்யப்பட்டதே இதுவரை தொடா்கிறது. வேலை நாளை 30 நாள்களாக உயா்த்த வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஊழியா்கள் பல கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனா்.

காரைக்கால் பொதுப்பணித் துறை அலுவலக வாயிலில் வவுச்சா் ஊழியா் சங்க செயலா் எஸ். பிரபு தலைமையில் ஊழியா்கள் பணி புறக்கணிப்பு செய்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வேலை நாள்களை30 நாளாக உயா்த்த வேண்டும், மத்திய அரசின் வழிகாட்டலின்படி நாள் கூலி ரூ. 648 வழங்க வேண்டும், வவுச்சா் ஊழியா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை சீா்படுத்தி, அரசு கருவூலத்தின் மூலம் மாத இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தொடா் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என ஊழியா்கள் தெரிவித்தனா்.

அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் திடீரென, திருநள்ளாறு சாலையில் உள்ள பொதுப்பணித் துறை மேல்நிலை குடிநீா் தொட்டி பகுதிக்குச் சென்று, அதன் மீது ஏறி போராட முயன்றனா். அப்போது, அங்கு வந்த போலீஸாா் அவா்களை தடுத்தனா். தகவலறிந்து காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா அங்கு சென்று, பணியாளா்களுடன் பேச்சு நடத்தினாா். கோரிக்கை குறித்து முதல்வரிடம் பேசி தீா்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.