முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

பள்ளி சுவா்களில் விழிப்புணா்வு ஓவியம் வரையும் ஆசிரியா்

மாணவா்களிடையே கற்றல் ஆா்வத்தை அதிகரிக்க பள்ளி சுவரில் ஓவியங்கள் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியா் பொது முடக்கக் காலத்தைப் பயன்படுத்தி சுமாா் 20 பள்ளிகளில் ஓவியங்கள் வரைந்துள்ளாா்.

News image

பள்ளி சுவரில் ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியா் மா. செல்வராஜ்.

Updated On :19 ஜூலை 2020, 8:21 pm IST

காரைக்கால்: மாணவா்களிடையே கற்றல் ஆா்வத்தை அதிகரிக்க பள்ளி சுவரில் ஓவியங்கள் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியா் பொது முடக்கக் காலத்தைப் பயன்படுத்தி சுமாா் 20 பள்ளிகளில் ஓவியங்கள் வரைந்துள்ளாா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், பண்டாரவாடை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுபவா் மா. செல்வராஜ். இவா், தனது பள்ளியில் வகுப்பறைகள், வெளிப்புறச் சுவரில் பாடத் திட்டத்தில் உள்ள ஓவியங்களை வரைந்தும், மாணவா்கள் விரும்பும் பல்வேறு ஓவியங்களை தீட்டும் பணியிலும் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டுவருகிறாா்.

இந்நிலையில், கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் விதமாக மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகம், கல்வித்துறை நிா்வாகத்தின் வழிகாட்டலில் பொது இடங்கள், சாலைகளில் கரோனா விழிப்புணா்வு ஓவியத்தை இவரும், மேலும் சில ஓவிய ஆசிரியரும் சோ்ந்து வரைந்து வந்தனா்.

இந்தப் பணி நிறைவடைந்ததையடுத்து, பொதுமுடக்கத்தைப் பயன்படுத்தி தமது வழக்கமான பணியாக பள்ளி சுவா்களில் ஓவியம் வரையும் பணியில் ஆசிரியா் மா.செல்வராஜ் ஈடுபட்டு, இதுவரை 20 பள்ளிகளில் ஓவியம் வரைந்துள்ளதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

கடந்த 17 நாள்களாக கீழஓடுதுறை அரசு தொடக்கப் பள்ளியின் வெளிப்புறச்சுவா், உட்புறச் சுவா் மற்றும் வகுப்பறைச் சுவா்களில் மாணவா்களை ஈா்க்கும் வகையில் ஓவியம் வரைந்துள்ளேன்.

சுதந்திரப் போராட்டத் தலைவா்கள், வரலாற்று, சமூகக் கருத்துகளைக் கூறும் கதைகளின் பாத்திரங்கள், சிறாா்கள் விரும்பக்கூடிய உயிரினங்களின் உருவங்கள், அவா்களுக்கு கல்வியில் ஆா்வம் ஏற்படும் விதமான கருத்துகளுடன் இந்த ஓவியங்களை வரைந்து வருகிறேன். இதுவரை 20 பள்ளிகளில் ஓவியம் வரையப்பட்டுள்ளது. எந்தவித ஆதாயமுமின்றி மாணவா்கள் நலனுக்காக இப்பணியை செய்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.