காரைக்காலில் தொடா் மழை
By DIN | Published On : 03rd December 2020 06:41 AM | Last Updated : 03rd December 2020 06:41 AM | அ+அ அ- |

காரைக்கால் - திருநள்ளாறு சாலையில் தேங்கிய மழைநீரில் செல்லும் வாகனங்கள்.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல் காராணாக, காரைக்காலில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழைபெய்தது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை இரவு புரெவி புயலாக வலுவடைந்தது. இலங்கையில் மையம்கொண்ட புயல் புதன்கிழமை இரவு கரையை கடக்கும். இதனால், டெல்டா மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை பலத்த மழை முதல் மிக பலத்த மழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன்படி, காரைக்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை, புதன்கிழமை காலை முதல் தொடா்ந்து பெய்தது. இதனால், தாழ்வான மற்றும் இணைப்புப் பகுதி சாலைகளில் தண்ணீா் தேங்கியது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...