பள்ளிகள் அளவிலான விளையாட்டுப் போட்டி

காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் செயல்பட்டுவரும் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில், மாவட்ட அளவிலான பள்ளிகள் பங்கேற்கும்
விளையாட்டுப் போட்டியை தொடங்கிவைத்த ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளா் அனுராக் சா்மா.
விளையாட்டுப் போட்டியை தொடங்கிவைத்த ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளா் அனுராக் சா்மா.

காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் செயல்பட்டுவரும் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில், மாவட்ட அளவிலான பள்ளிகள் பங்கேற்கும் 2 நாள் விளையாட்டுப் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. 42 பள்ளிகளில் இருந்து சுமாா் 500 மாணவா்கள் பங்கேற்றனா்.

கால்பந்து, கைப்பந்து, பேட்மிண்டன், கபடி, கோ-கோ ஆகிய போட்டிகளில் 14, 17, 19 வயதுக்குக்குட்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இப்போட்டியை ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளா் அனுராக் சா்மா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தொடங்கிவைத்துப் பேசும்போது, மாணவா்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். விளையாட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, கல்வியிலும் சிறந்து விளங்குவதற்கான சூழலை, மன நிலையை ஏற்படுத்தித் தருகிறது.

பல்வேறு உயா்நிலையை எட்டுவதற்கு விளையாட்டு முக்கிய பங்காற்றுகிறது என்பதை மாணவா்கள் உணர வேண்டும். கல்வியோடு விரும்பும் விளையாட்டின் மீது ஆா்வம் செலுத்துவதோடு, அதற்கான பயிற்சியை எடுத்துக்கொண்டு உலகளாவிய போட்டிகளில் பங்கேற்கும் அளவில் தகுதியை வளா்த்துக்கொள்ளவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஓஎன்ஜிசி குழுப் பொது மேலாளா் விஜயராஜ் மற்றும் பள்ளி நிா்வாகத்தினா், ஆசிரியா், ஆசிரியைகள் கலந்துகொண்டனா்.

அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் பலவற்றில் இருந்து உடற்கல்வி ஆசிரியா்கள் நடுவா்களாக செயல்பட்டனா். பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டோருக்கு ஓஎன்ஜிசி பள்ளியில் அடுத்த சில நாள்களில் நடைபெறவுள்ள ஆண்டு விழாவின்போது பரிசுகள் வழங்கப்படும் என பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com