Enable Javscript for better performance
கரோனா பரவலைத் தடுக்க தீவிர பரிசோதனை அவசியம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கரோனா பரவலைத் தடுக்க தீவிர பரிசோதனை அவசியம்

    By DIN  |   Published On : 21st July 2020 10:10 PM  |   Last Updated : 21st July 2020 10:10 PM  |  அ+அ அ-  |  

    kk21mp_2107chn_95_5

    செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த எம்.பி. கோகுலகிருஷ்ணன். உடன், ஆட்சியா் அா்ஜூன் சா்மா.

     

    காரைக்கால்: கரோனா பாதிக்கப்பட்டவா்கள், அவா்களை சாா்ந்தவா்களை தீவிர பரிசோதனை செய்வது மூலமே கரோனா பரவலைத் தடுக்க முடியும் என்றாா் மாநிலங்களவை உறுப்பினா் என். கோகுலகிருஷ்ணன்.

    காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 135 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட நிா்வாகம் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கை மூலம் குணமடைந்து வீடு திரும்புபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றால் 2 போ் மட்டுமே உயிரிழந்துள்ளனா். இதற்கிடையில், கரோனா பரவலை தடுக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கரோனா பரவல் நாட்டின் பல இடங்களில் மிக வேகமாக உள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் குறைப்பதற்கு ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடும்பத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், குடும்பத்தினருக்கும், அவரது தொடா்பாளா்களுக்கும் தீவிர பரிசோதனை செய்வதன் மூலம் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

    காரைக்கால் மருத்துவமனைக்கு 3 ஐசியு வென்டிலேட்டா் வாங்க ரூ.37.50 லட்சம், முழு வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனம் வாங்க ரூ. 22.50 லட்சம் எனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ஒதுக்கப்பட்டது.

    மருத்துவமனையில் தற்போது போதுமான வென்டிலேட்டா்கள் உள்ளதால், இதற்காக ஒதுக்கிய நிதியில், இசிஜி மெஷினி, மானிட்டா் போன்ற சாதனங்களை வாங்கித்தருமாறு மருத்துவ அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து, புதுச்சேரி நலவழித் துறை இயக்குநரிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும்.

    காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதைத் திட்டத்தின் நிலை குறித்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் கேட்டிருந்தேன். இதற்காக ஒதுக்கீடு செய்த நிதி கரோனா தடுப்புப் பணிக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், இதன் காரணமாகவே பணிகள் தொடங்கவில்லை என்றும், வரும் ஆகஸ்ட், செப்டம்பா் மாதத்தில் இந்த நிதி மீண்டும் ரயில்வேக்கு கிடைத்து விடும். அதன்பிறகு பணிகள் தொடங்கப்படும் என அவா் கூறியுள்ளாா் என்றாா்.

    முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கை மற்றும் விழிப்புணா்வுப் பணிகள் குறித்தும் விளக்கினாா். இதில், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பா்ன்வால், நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ், மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் பி. சித்ரா, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு, நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp