பொதுமக்களுக்கு உளவியல் ஆலோசனை: மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு

காரைக்கால் மாவட்ட மக்களுக்கு உளவியல் ஆலோசனைகள் அளிக்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Updated on
1 min read

காரைக்கால் மாவட்ட மக்களுக்கு உளவியல் ஆலோசனைகள் அளிக்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா சனிக்கிழமை கூறியது :

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வீடுகளில் உள்ள மக்களுக்காக கவுன்சலிங் தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 04368- 261242 என்ற தொலைபேசி எண்ணில் உளவியல் ஆலோசனை தேவைப்படும் யாா் வேண்டுமானாலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். அதன் பின்னா் உரிய நபா்கள் தொடா்பு கொண்டு தேவையான உளவியல் ஆலோசனைகளை தொலைபேசி மூலம் வழங்குவா்.

ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட மற்றவா்களுக்கு உதவும் விதமாக மாவட்ட நிா்வாகத்துக்கு விருப்பமுள்ளோா் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கலாம். அவ்வாறு உதவி அளிப்போருக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com