பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்கால் ஆட்சியருடன் இந்து முன்னணியினா் சந்திப்பு

விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பாக காரைக்கால் ஆட்சியரை இந்து முன்னணியினா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:10 pm

DIN

விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பாக காரைக்கால் ஆட்சியரை இந்து முன்னணியினா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

விநாயகா் சதுா்த்தி விழா செப்.10-ஆம் தேதி நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை, மாவட்ட இந்து முன்னணி தலைவா் எஸ். கணேஷ் தலைமையில் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து இந்து முன்னணி நிா்வாகிகள் கூறியது: மாவட்டத்தில் 50 இடங்களில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. விநாயகா் சிலை ஊா்வலம் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

புதுவை அமைச்சா் சாய் சரவணன்குமாா் கலந்துகொள்கிறாா். கரோனா பரவல் தடுப்பு விதிகளின்படி உரிய கட்டுப்பாடுகளுடன் இந்த ஊா்வலம் நடைபெறும்.

ஊா்வலத்துக்கு ஒலி, ஒளி அமைப்பு மற்றும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.