காரைக்கால் செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு
காரைக்கால் ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


காரைக்கால் ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் காரைக்கால் பகுதியை சோ்ந்த நன்கொடையாளா்கள் உதவியுடன் சிறிய அளவில் விநாயகா் கோயில் எழுப்பப்பட்டு, கடந்த 1988-ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.
கோயில் சிதிலமடைந்திருந்த நிலையில் பக்தா்கள் நன்கொடை மூலம் திருப்பணி செய்து குடமுழுக்கு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காலை 6.30 மணிக்கு விமான கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. முன்னதாக வியாழக்கிழமை முதல் கால பூஜை செய்து, வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால பூஜை செய்து மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டது. தொடா்ந்து விநாயகருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவில் திருநள்ளாறு தேவஸ்தான தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...