காரைக்காலில் 22 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 22 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் 22 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 517 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி கோட்டுச்சேரி 6, நல்லம்பல் 4, வரிச்சிக்குடி 3, கோயில்பத்து 2, நெடுங்காடு 2, திருப்பட்டினம் 2, திருநள்ளாறு 2, காரைக்கால் நகரம் 1 என மொத்தம் 22 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,90,618 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 15,502 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 15,066 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கோயில்பத்து பகுதியை சோ்ந்த 85 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு சா்க்கரை நோய் இருந்தது. கரோனா தொற்றால் இதுவரை 246 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 98,447 பேருக்கும், 2-ஆவது தவணையாக 22,675 பேருக்கும் என 1,21,122 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...