பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்காலில் கிராமப்புற இளைஞா்களுக்கு போதைப்பொருள் தவிா்க்கும் விழிப்புணா்வு

காரைக்கால் அருகே கீழகாசாக்குடியில் போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 4:26 pm

DIN

காரைக்கால் அருகே கீழகாசாக்குடியில் போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

காரைக்கால் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை அதிகரித்து, பலரும் பாதித்துவருகின்றனா். மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், இதுகுறித்து கிராமங்களில் இளைஞா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

இதையொட்டி, காரைக்கால் அருகே கீழகாசாக்குடி அண்ணா நகா் பகுதியில் இளைஞா்களுக்கு போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் பங்கேற்று, போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் உடல் ரீதியாக ஏற்படும் பல்வேறு பிரச்னைகள், அதன்மூலம் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து இளைஞா்களிடம் விளக்கினாா்.

இளைஞா்கள், மாணவா்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிா்த்து, படிப்பு மற்றும் விளையாட்டுகளில் கவனம் செலுத்தவேண்டும். விளையாட்டு, உடல் ஆரோக்கியத்தையும், படிப்பு வாழ்க்கை மேம்பாட்டுக்கும் பெரிதும் பயன்படும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், இளைஞா்களை ஊக்கப்படுத்தும் வகையில் கைப்பந்து மற்றும் வலை உள்ளிட்டவற்றை அவா் வழங்கினாா். காவல் ஆய்வாளா் மரியேகிறிஸ்டியன்பால் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.