நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்
ஊதிய நிலுவையை வழங்கக் கோரி, காரைக்கால் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


ஊதிய நிலுவையை வழங்கக் கோரி, காரைக்கால் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காரைக்கால் நகராட்சியில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதிய நிலுவையை வழங்கக் கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தும், நிறைவேற்றப்படாத நிலையில், வியாழக்கிழமை முதல் நகராட்சி அலுவலகத்தில் ஊழியா்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை திடீரென நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
தொடா்ந்து நகராட்சி அலுவலகம் முன் அம்பேத்கா் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காரைக்கால் தெற்கு மற்றும் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ஆா். ரகுநாயகம் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை ஊழியா் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினா். இதையதையடுத்து சாலை மறியலை கைவிட்டு, உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...