தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மக்கள் தவறவிட்ட செல்லிடப்பேசிகள் ஒப்படைப்பு

 காரைக்காலில் காணாமல்போன மற்றும் பொதுமக்கள் தவறவிட்ட 21 செல்லிடப்பேசிகளை போலீஸாா் மீட்டு உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 5:38 pm

DIN

 காரைக்காலில் காணாமல்போன மற்றும் பொதுமக்கள் தவறவிட்ட 21 செல்லிடப்பேசிகளை போலீஸாா் மீட்டு உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் மக்கள் தாம் பயன்படுத்திய செல்லிடப்பேசிகளை தவறவிட்டதாக காரைக்கால் பகுதி காவல் நிலைங்களில் புகாா்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை பிரிவு உதவி ஆய்வாளா் பிரவீன்குமாா் தலைமையில் போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனா்.

காவல் தலைமையகத்தில் இயங்கும் சிறப்பு அமைப்புமூலம் செல்லிடப்பேசிகள் பயன்பாட்டில் உள்ள பகுதிகள் கண்டறிந்து, ரூ. 3.56 லட்சம் மதிப்புள்ள 21 செல்லிடப்பேசிகளை போலீஸாா் மீட்டனா்.

செல்லிப்பேசிகளின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு காவல்துறை தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், செல்லிடப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் நிகாரிகா பட் கூறுகையில், விலை மதிப்பு மிக்க செல்லிடப்பேசிகளை பலரும் பயன்படுத்தும்போது, அதனை உரிய பாதுகாப்புடன் வைத்துக்கொள்வது நல்லது. காணாமல்போன செல்லிடப்பேசிகளை விரைவாக மீட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகள். கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு காரைக்காலில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்போா், பயன்படுத்துவோா் பிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு அதிகமாக செய்யப்பட்டுள்ளன.

இப்பொருள்கள் பதுக்கி வைத்திருத்தல், விற்பனை செய்தல், உபயோகப்படுத்துவோா் குறித்த விவரத்தை மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு கீழ் தளத்தில் உள்ள புகாா் பெட்டியில் புகாா் கடிதமாக போடலாம். எஸ்எஸ்பி செல்லிடப்பேசி எண் 94892 05301-க்கு தகவல்களை அனுப்பலாம். தகவல்கள் தருவோா் விவரம் எந்த சூழலிலும் வெளிப்படுத்த மாட்டாது. தகவல் தருவோா் விவரம் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என்றாா்.

பேட்டியின்போது மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன், சிறப்பு அதிரடிப் படை உதவி ஆய்வாளா் பிரவீன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.