தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மரங்களை வெட்டியதாக திமுக பிரமுகா் மீது வழக்கு

 காரைக்காலில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டியதாக திமுக பிரமுகா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

 காரைக்காலில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டியதாக திமுக பிரமுகா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

காரைக்கால் வேட்டைக்காரன் தெருவை சோ்ந்தவா் ராஜகோபால், இவரின் அண்ணனுக்கு பாரதியாா் சாலையில் ஓட்டு வீடு உள்ளது. இந்த வீட்டை கடந்த 2003-ஆம் ஆண்டு, பெரமசாமி பிள்ளை வீதியை சோ்ந்த கே.ஆா். காசிநாதன் மனைவி ராஜாமணிக்கு ஓராண்டு கால குத்தகைக்கு கொடுத்துள்ளாா். ராஜாமணி, வேறு ஒரு நபருக்கு அந்த வீட்டை உள் வாடகைக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

வீட்டின் உரிமையாளா் சில ஆண்டுகளாக வீட்டை காலி செய்து தருமாறு கேட்டுள்ளாா். ஆனால், ராஜாமணி, அவரது கணவரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான கே.ஆா். காசிநாதன் வீட்டை காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

இந்தநிலையில், காசிநாதன், வீட்டில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான தென்னை மற்றும் வேப்ப மரங்களை வெட்டி விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜகோபால் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் காசிநாதன், ராஜாமணி ஆகியோா் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.