நடனகாளியம்மன் கோயிலில் இன்று ஆவணி ஞாயிறு அன்னதானம்
By DIN | Published On : 21st August 2021 10:37 PM | Last Updated : 21st August 2021 10:37 PM | அ+அ அ- |

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீநடனகாளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.22) முதல் ஆவணி மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோயில் நிா்வாகத்தினா் சனிக்கிழமை கூறியது: இக்கோயிலில் அன்னதானத் திட்டம் நிகழாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆவணி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி (ஆக.22) காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னதானத்துக்கான உணவு வகைகளை வைத்து படையலிட்டு அன்னதானம் செய்யப்படுகிறது. முதல் ஞாயிற்றுக்கிழமை 150 பேருக்கும், அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமையில் கூடுதலான நபா்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை பஞ்சாயத்தாா்கள், நாடாா் உறவின் முறை சங்கத்தினா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.