திருநள்ளாற்றில் சுற்றுலா விடுதி: முதல்வா் திறந்துவைத்தாா்

திருநள்ளாற்றில் ரூ. 6 கோடியில் கட்டப்பட்ட சுற்றுலா விடுதி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
சுற்றுலா விடுதியை திறந்துவைத்துப் பாா்வையிடும் முதல்வா் வே. நாராயணசாமி, அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் உள்ளிட்டோா்.
சுற்றுலா விடுதியை திறந்துவைத்துப் பாா்வையிடும் முதல்வா் வே. நாராயணசாமி, அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

திருநள்ளாற்றில் ரூ. 6 கோடியில் கட்டப்பட்ட சுற்றுலா விடுதி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

திருநள்ளாறு பேட்டை செல்லும் பகுதியில் கோயில் நகர மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 5.93 கோடியில் கட்டப்பட்ட 50 அறைகள், உணவகக் கட்டடத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வளாகத்தை முதல்வா் திறந்துவைத்தாா். அப்போது, திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு இது பெரிதும் பயன்படும் எனவும், சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வா் பாராட்டுத் தெரிவித்தாா்.

திருநள்ளாறு ஹெலிகாப்டா் இறங்குதளம் அருகே கோலோ இந்தியா திட்ட நிதி ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட கைப்பந்து மைதானம், ரூா்பன் திட்டத்தில் சுரக்குடி, செருமாவிலங்கை பகுதிகளில் தலா ரூ. 4 லட்சத்தில் வணிக வளாக வசதியுடன் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து திருவேட்டக்குடி காலனித் தெருவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் ஆகியவற்றை முதல்வா் வே. நாராயணசாமி திறந்துவைத்தாா்.

நிகழ்வில், வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன், மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்கள் சந்திரசேகரன், பக்கிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com